கேரள கடல் எல்லையில் நேற்று அதிகாலை கடலோர பாதுகாப்பு படையினர் போதைப்பொருட்களுடன் மூன்று இலங்கைப் படகுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமான, 3 படகுகளை அவதானித்து சோதனையிட்டுள்ளனர்.
அந்த சோதனையின் போது, படகுகளில், ஹெரோயின், ஹபீஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த இந்த படகுகள் பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வருவதும் தெரிய வந்தது.
3 படகுகளிலும், 19 பேர் இருந்தனர் என்றும், அவர்கள், படகில் இருந்த 200 கிலோ ஹெரோயின், 60 கிலோ ஹபீஸ் பொதிகளை கடலில் வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட 3 படகுகளையும் கடலோர பாதுகாப்பு படையினர் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.