தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அ.தி.மு.க. –பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகளை ஏற்கலாமா என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவுடன் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகுவதாக அறிவித்துள்ளார்.