சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 15 ஆவது நாளாக இன்று தொடர்கின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, அம்பாறை மாவட்ட இளைஞர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு வழங்கியுள்ளனர்.