கிளிநொச்சியில் உருத்திரபுரீச்சரம் சிவன் கோவில் வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தப் பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நேற்று ஆலய வளாகப் பகுதியை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உருத்திரபுரீச்சரம் ஆலய வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாக சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.
குருத்தூர் மலை அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இந்தப் பகுதியை பௌத்த பிக்கு ஒருவர், பார்வையிட்டுச் சென்றிருந்தார்.
உருத்திரபுரீச்சரம் ஆலயப் பகுதியில் எதிர்வரும் 23ம் திகதி அகழ்வு பணிகள் முன்னெடுக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதால், அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.