சாதி பார்த்து வாக்களிக்காமல், சாதிப்பவனை பார்த்து வாக்களியுங்கள் என மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமலஹாசன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “வேட்பாளர்கள் மக்கள் குறைகளை தெரிந்து கொண்டு வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும். மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் போலியான வாக்குறுதிகளை கொடுக்க கூடாது.
மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுதல் பொருத்தமற்ற அரசியல் செயற்பாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.





