வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தனிமைப்படுத்தலின்றி வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வானூர்தி நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் செயன்முறைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்குரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களும் இரு வாரங்கள் தனிமைப்படுதலை நிறைவு செய்தவர்களும், விரைவில் சிறிலங்காவுக்கு வருகைதர முடியும் என்று சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களை நாடு திரும்பியதும், பி.சி.ஆர் சோதனைகளை அடுத்து வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.