இராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக மேலதிகமாக சிறப்பு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் (Olivier Veran) தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோருக்கு தடுப்பூசிகளை விரைவாக போட்டுக்கொள்ளும் நோக்கத்தோடு, குறைந்தது 35 கொரோனா தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த நிலையங்களில் தடுப்பூசிகள் போடப்படும். முதல்கட்டமாக இந்த நிலையங்களூடாக இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் என மொத்தம் 1.9 மில்லியன் அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.