இந்தியப் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு நாளை ஒருநாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க – என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வான்வெளியில் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவினை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.