தமிழகத்தில் நாளை இரவு 7 மணிக்குப் பின்னர், தொகுதியுடன் தொடர்பு இல்லாதவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.
வரும் 6 ஆம் நாள் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
இறுதிநாளில் பிரச்சாரத்திற்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளதால், நாளை இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம்.
அதற்குப் பின்னர் தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.
நாளை இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.