இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாட மக்கள் விழித்ததற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பெய்த மழையால் கத்தோலிக்க பெரும்பான்மையான புளோரஸ் தீவில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதே நேரத்தில் தீவின் கிழக்கு முனையில் பாலங்கள் மற்றும் வீதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் அழிக்கப்பட்டன.
கிழக்கு புளோரஸ் (FLORES) பகுதியில் ஒன்பது பேர் காயமடைந்து 71பேர் உயிரிழந்ததாகவும், சிலர் இன்னும் சேற்றுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தேசிய பேரிடர் தணிப்பு முகமை செய்தித் தொடர்பாளர் ராதித்யா ஜாதி தெரிவித்தார்.
அதேவேளை 42பேரைக் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் எதிர்வரும் வாரத்தில் தீவிர வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜாதி மேலும் கூறினார்.