டில்லிக்கு அவசரமாக ஒக்சிஜனை வழங்குமாறும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி கேட்டுக் கொள்வதாக உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
புதுடில்லியில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் மருந்துக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில மணிநேரத்திற்கு போதுமான ஒக்சிஜன் மட்டுமே உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கீச்சகப் பதிவில், ‘டில்லியில் கடுமையான ஒக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது.
இக்கட்டான இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு உதவ வேண்டும். டில்லிக்கு அவசரமாக ஒக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.