கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர் பாதிக்கப்பட்டதோடு 130பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஏழு இலட்சத்து 61ஆயிரத்து 227பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 533பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 57ஆயிரத்து 743பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 872பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஒன்ராரியோவில், கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 670பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோ, 49மரணங்களும் சம்பவவித்துள்ளன. அத்துடன் 2725பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.