முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

249

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்  இன்று இடம்பெற்ற மோதல்களில், 3 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில்  இந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்த போது, மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்களை அடுத்து குறித்த பகுதி, சுற்றிவளைக்கப்பட்டு, தொடர்ந்து தேடுதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *