முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

33ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

589

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலும் சில மனித எச்சங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதோசா விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த அகழ்வு பணிகள் இன்று 33 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்ற இந்த அகழ்வு பணிகளில், சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ச தலைமை தாங்கி வருவதுடன், அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவ மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது வரை 27 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த புதைகுழியில் மோதிர வடிவிலான வட்ட வடிவான ஒரு தடய பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தடயப் பொருளை அடையாளப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை இடை நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *