தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7ஆயிரத்து 255 வேட்புமனுக்களில் 4ஆயிரத்து 512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்டார்.
இதேவேளை தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் ஆண்கள் 3.09 கோடி பேரும் பெண்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் 7 ஆயிரத்து 192 திருநங்கைகள் வாக்காளர்களாக உள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
22222222.