முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

54 தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால்கைது

236

சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 54 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கச்சதீவுக்கு அருகே இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  20 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளில் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகருக்கு அப்பால், அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 75 அடி நீளம் கொண்ட பாரிய படகில் இருந்த 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் மூலம், நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் இந்திய மீனவர்களை, படகுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *