முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

54 போராட்டக்காரர்கள் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

197

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 54 போராட்டக்காரர்கள் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட் (michelle bachelet) கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுமார் ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இராணுவ தாக்குதல்களின்போது காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தாக்கக் கூடாது என்ற ஐ.நாவின் விதிமுறையை மீறி மியான்மர் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்கள் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மியான்மர் இராணுவத்தின் அத்துமீறல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்றும்,. இதற்கு உலக நாடுகள் இணைந்து விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *