முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

55 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று உறுதி

1455

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு வடக்கில் நேற்று  கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கும்,  

பருத்தித்துறை  மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்ட தலா இரண்டு பேருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவரும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மருத்துவமனையில் 5 பேருக்குக்கும்,  பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், பூவரசங்குளம் மருத்துவமனையில் 6 பேருக்கும், மன்னார் மருத்துவமனையில் 7 பேருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *