புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு வடக்கில் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கும்,
பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட தலா இரண்டு பேருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவரும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மருத்துவமனையில் 5 பேருக்குக்கும், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், பூவரசங்குளம் மருத்துவமனையில் 6 பேருக்கும், மன்னார் மருத்துவமனையில் 7 பேருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.