முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்

264

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டம் பகுதியில் 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தில் இருந்து அண்மையில் குழந்தையுடன் திரும்பிய 23 வயதுடைய, திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் குழந்தையை தடியால் அடித்து துன்புறுத்தும் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்தே, காவல்துறை சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், இன்று குறித்த வீட்டுக்குச் சென்று தாயைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும், மணியந்தோட்டத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *