• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Saturday, January 31, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது உணவுப் புறக்கணிப்பு போராட்டம் கடும் மழையின் மத்தியிலும் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

dineshpress by dineshpress
January 25, 2017
in இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உணவுப் புறக்கணிப்பு போராட்டமானது கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 14 பேர் சாகும் வரையிலான தொடர் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை வவுனியா தபால் நிலையம் அருகில் முன்னெடுத்து வருகின்றனர்.

பகல் பொழுதில் பலரும் வருகை தந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற போதிலும், அவர்கள் இயலாத நிலையிலும், கடும்மழை, கடும் குளிர் என்பவற்றுக்கு மத்தியிலும் இரவுப் பொழுதை தனிமையில் கழித்துள்ளனர்.

இதனால் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சிலரது உடல்நிலை பலவீனம் அடைந்துள்ளதனை அடுத்து, மருத்துவர்கள் அங்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள போதிலும், தமக்கான உரிய பதிலை இந்த அரசாங்கம் வழங்காத பட்சத்தில் தாம் இறப்பதற்கும் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்ட களத்திற்கு சென்ற காவல்த்துறையினர், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தகவல்களை சேகரித்துள்ளனர்.

குறித்த இந்த போராட்டத்திற்கு ஆதரவுகள், குறிப்பாக இளைஞர்கள் அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்க முற்பட்டு வருவதுடன் அரசியலாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை போராட்ட களத்திற்கு சென்ற காவல்த்துறையினர், படிவமொன்றில் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை திரட்டியுள்ளதுடன், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்வாறு விபரங்களை திரட்டுமாறான இந்த உத்தரவு எங்கிருந்து காவல்த்துறையினருக்கு கிடைத்து என்பது தெரியாத நிலையிலும், காவல்த்துறையினரே தகவலை சேகரிப்பதால் காணாமல் போனோரின் உறவினர்கள் தகவலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த காணாமல் போன உறவுகளின் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் அடையாள உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் வவனியாவில் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஏதாவது நேர்ந்தால்,அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும், அப்படி ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மீளாய்வு செய்யவேண்டி வருமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றில் இடம்பெற்ற திறைசேரிமுறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றாதுள்ளதாகவும், இது விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்கின்றார் என்பதற்காக, ஒட்டுமொத்த கூட்டமைப்பினரோ அல்லது தமிழ் மக்களோ சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வார்களென கருதக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆளும் கட்சியில் உள்ள எவருக்காவது கூற முடியுமா என்றும் நாடாளுமன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியுமெனவும் குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், ஆகக்குறைந்தது காணாமல்போன உறவுகள் உயிருடன் இருந்தால் இருக்கின்றனர் என்றும், இல்லையென்றால் கடந்த அரசால் கொலைசெய்யப்பட்டு விட்டனர் என்றாவது கூறமுடியுமல்லவா எனவும் வினவியுள்ளார்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஆணைக்குழுக்களை அமைப்பது, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவது போன்ற நிலைமைகளே நீடித்து வருவதாகவும் சாடியுள்ள அவர், காணாமல் போனவர்கள் குறித்து ஆராய கடந்த அரசு குழுவொன்றை அமைத்திருந்ததுடன், அந்தக் குழுவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்திருந்த நிலையில், அவ்வாறான சாட்சிகள் தற்பொழுது குப்பையில் போடப்பட்டுள்ள என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரையிலான உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் நாடாளுமன்றிலர் இருந்தோருக்கு தெரிவித்துள்ளார்.

இதில் பெண்கள் மற்றும் வயதானவர்களே கலந்து கொண்டுள்ளதாகவும், இவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள சிவசக்தி ஆனந்தன், காணாமல் போனவர்களின் உறவுகள் உள்ளடங்கலாக, வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவிலேயே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

ஒன்ராறியோவில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் முதியவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Next Post

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்பந்தமான கலந்துரையாடல் கிழக்கு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்பந்தமான கலந்துரையாடல் கிழக்கு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In