Proud Boys அமைப்பினை தீவிரவாத குழுவாக பிரகனடப்படுத்துவற்கு நடாளுமன்றில் ஏகோபித்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எ.டி.பி.யின் தலைவர் ஜெக்மீத் சிங் உள்ளிட்டவர்கள் இதற்கான ஆதரவளித்தமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
குறித்த குழுவின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைள் தொடர்பில் நீண்டகால அவதானத்திற்குப் பின்னரேயே அதனை தீவிரவாத அமைப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டதாக சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் கப்பிட்டல்ஹில்லில் கடந்த ஜனவரி ஆறில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் இந்த அமைப்புக்கு தொடர்புடையதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.