• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Saturday, January 31, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இந்தியா

காவல்துறை அத்துமீறியதாக நடுக்குப்பம் மக்கள் கொந்தளிப்பு

dineshpress by dineshpress
January 27, 2017
in இந்தியா, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவான போராட்டங்களை ஒட்டி ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் ஏற்பட்ட கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்கள், காவல்துறையே தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டுகிறார்கள். காவல்துறை அதனை மறுத்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவான போராட்டங்களை ஒட்டி ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் வெடித்த கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்கள், காவல்துறையே தங்களை தாக்கியதாக குற்றம் சாட்டுகிறார்கள். காவல்துறை அதனை மறுக்கிறது.

மெரீனா கடற்கரையிலிருந்து அவ்வை சண்முகம் சாலையில் நுழைந்தவுடன் அமைந்திருக்கும் நடுக்குப்பம் கிராமம், தமிழகத்தின் முன்னோடி பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலர் பிறந்த பகுதி.

தற்போது சுமார் 750 மீனவ இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. 384 கடைகளைக் கொண்டு ஒரு மிகப்பெரிய மீன் பிடி சந்தையும் இப்பகுதியில் இருக்கிறது.

23ஆம் தேதி மதியம் திடீரெனக் கலவரம் வெடித்ததும் சில இளைஞர்கள் இந்தப் பகுதிக்குள் ஒடிவந்ததாகவும் அவர்களைத் துரத்திவந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களைத் தேடி வீடுகளுக்குள் புகுந்ததாகவும் எதிர்ப்பட்டவர்களைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள் இந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)

இந்தத் தாக்குதலை நேரில் பார்த்த விஜயா என்பவர் பிபிசியிடம் இதைப் பற்றிக் கூறும்போது, “ஓடிவந்தவர்கள், போலீஸுக்குப் பயந்து அடைக்கலம் கேட்கும்போது கொடுக்காமல் இருக்க முடியுமா? அதைப் பார்த்து காவல்துறையினர் கோபப்பட்டு, இங்கிருக்கும் வண்டிகளை நொறுக்கி, தீவைத்தனர்” என்று விவரித்தார்.

இதற்குப் பிறகு இங்குள்ள மீன் சந்தையை காவல்துறையினரே தீ வைத்து எரித்ததாகவும் பாஸ்பரஸ் பொடியை தூவி எரித்ததாகவும் அதன் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அது தவிர, அந்த மீன் சந்தையை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் காவல்துறையினரே எரித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் : அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழக காவல் துறை

மீன் சந்தைக்குத் தீ வைக்கப்பட்டதில், அன்றைய வியாபாரத்திற்கு என வைக்கப்பட்டிருந்த மீன்களும் முழுமையாக எரிந்து, வெந்துபோய்விட்டன. ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பை இதனால் எதிர்கொண்டுள்ளனர்.

“ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் மீன்கள், கிலோ கணக்கில் இங்கு வைத்திருந்தோம். கடை வைத்திருந்த அனைவருமே பெண்கள். இப்போது எங்கு போவது, என்ன செய்வது என்று தெரியவில்லை” என்கிறார் இந்த மீன் சந்தையில் கடை வைத்திருக்கும் நாகவல்லி.

சென்னை வன்முறை; தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

காவல்துறையைப் பொறுத்தவரை இந்த தீ வைப்பு சம்பவத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. மேலும், அவ்வை சண்முகம் சாலையில் கலவரக்காரர்கள் கற்களைத் தூக்கியெறிந்தும் வாகனங்களை நொறுக்கியும் கலவரத்தில் ஈடுபடும் காட்சிகளைக் கொண்ட வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சென்னை நகரக் காவல்துறை வெளியிட்டுள்ளது.

நடுக்குப்பம் பஞ்சாயத்தின் தலைவரான அசோக், இவ்வளவு பெரிய தாக்குதலைச் சந்திக்கும் அளவுக்கு இப்பகுதி மக்கள் செய்த தவறு என்ன என்று கேள்வியெழுப்புகிறார். “சமூக விரோதிகள் ஒருபோதும் இங்குவந்து இருந்ததில்லை. நாங்களும் எந்த பிரச்சனைக்கும் போனதில்லை” என்கிறார் அவர்.

ஜனவரி 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்தபோது ஆயிரக்கணக்கானவர்கள் இரவிலும் பகலிலும் கடற்கரையிலேயே தங்கியிருந்து இந்தப் போராட்டங்களை நடத்தினர். அப்போது சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தே போராட்டக்காரர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

போராட்டம் முடிந்த இன்றைய மெரினா (புகைப்படத் தொகுப்பு)

அதேபோல, 23ஆம் தேதி காலையில் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, அவர்களில் ஒருபகுதியினர் கடலை நோக்கிச் சென்றனர். அவர்களுடன் மீனவ மக்களும் சேர்ந்துகொண்டனர். இதுவே காவல்துறையின் கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

இந்தப் பகுதியில் வசிப்பவர்களின் வாழ்வாதாரமாக இருந்த மீன் சந்தை விரைவில் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் ஊர்த் தலைவரான அசோக். மேலும் சரியான வகையில் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

ஜல்லிக்கட்டு வன்முறை: கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரி நடந்த போராட்டம் கடந்த ஜனவரி 17ஆம் தேதி துவங்கியது. தமிழக அரசு அதற்கென அவசரச் சட்டத்தைப் பிறப்பித்த பிறகும், போராட்டக்காரர்கள் போராட்டங்களை முடித்துக்கொள்ளாததால், 23ஆம் தேதியன்று அவர்களை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றபோது, சென்னை நகரம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக சுமார் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் செரீனா, ரபேல் நடால்; சானியா, இவான் டுடிக் ஜோடி அசத்தல்

Next Post

தடுப்புச்சுவர் கட்ட நிதி தரவில்லையெனில் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் – மெக்சிகோ அதிபருக்கு டிரம்ப் பதிலடி

Related Posts

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி
இந்தியா

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
நட்சத்திர விழா 2025
எம்மவர் நிகழ்வுகள்

நட்சத்திர விழா 2025

June 22, 2025
Next Post

தடுப்புச்சுவர் கட்ட நிதி தரவில்லையெனில் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் - மெக்சிகோ அதிபருக்கு டிரம்ப் பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In