• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Thursday, April 23, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும்.

dineshpress by dineshpress
November 14, 2019
in இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக  தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காண்­ப­திலும்  பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை  இல­கு­வாக  தீர்க்­கக்­கூ­டிய  பிரச்­சி­னைகள் அல்ல. பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை  முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான  தீர்­வு­களை எட்­டு­வது அவ­சி­ய­மாகும். அவை சவா­லான பணிகள் என்­பதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை.  

பிர­தான வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளிவந்­து­விட்­டன. நாட்டு மக்கள்  விசே­ட­மாக தமிழ்ப்ேசும் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த இர­ண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள்  வெளியி­டப்­பட்­டுள்­ளன. மக்கள் தற்­போது குறித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை மதிப்­பிட்டு தமது தீர்­மா­னத்தை எதிர்­வரும் 16 ஆம் திகதி  எடுப்­ப­தற்கு தயா­ரா­கி­ வ­ரு­கின்­றனர்.

ஆனால்  நவம்பர் மாதம் 16 ஆம் திக­திக்கு பின்னர் இந்த நாட்டில் புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள்  உள்­ளன என்­பது  உண்­மை­யானது.  விசே­ட­மாக   தமிழ்ப்பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பாதிப்பு­க­ளுக்குத்  தீர்வு காண்­ப­திலும்   பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை  இல­கு­வாக  தீர்க்­கக்­கூ­டிய  பிரச்­சி­னைகள் அல்ல.   பல வழி­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி    தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு  சரி­யான தெளிவு­ப­டுத்­தல்­களை  முன்­னெ­டுத்து சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான  தீர்­வு­களை எட்­டு­வது என்­பது  கடி­ன­மா­ன­தே. ஆனால்  புதி­தாக  ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­றவர் இந்த கடின பாதையைக் கடந்­தா­க­வேண்டும்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் அர­சியல், அபி­வி­ருத்தி, சமூக, பொரு­ளா­தார, கலா­சார  விட­யங்­களை  அடுத்து ஐந்து வரு­டங்­க­ளுக்கு எவ்­வாறு கையாள்­வது மற்றும்  அவற்­றுக்­கான  கொள்கை திட்­டங்கள் அணு­கு­மு­றைகள் என்ன என்­பது   தொடர்­பாக இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும்  தமது விஞ்­ஞா­ப­னங்­களில் கார­ணி­களை முன்­வைத்­துள்­ளனர். அது மட்­டு­மன்றி பிர­தான வேட்­பா­ளர்­களும் பிர­சாரக் கூட்­டங்­களில் தமது  கொள்­கை­களை விளக்­கிக்­கூ­றி­வ­ரு­வ­துடன் வாக்­கு­று­தி­களை அள்­ளித்தெளித்து ­வ­ரு­கின்­றனர்.

இவற்றில்  இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்­களை பொறுத்­த­வரை நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விடயம்  மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் போன்­ற­வற்­றுக்­கான  இரண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் கொள்கை திட்­டங்கள்  மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமை­கின்­றன.

பொது­வாக தமிழ்ப்பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரை,  அர­சியல் பிரச்­சினை முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.   தமது அர­சியல் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்யும் நோக்­கி­லான ஒரு தீர்­வுத்­திட்­டத்தை அடை­வ­தற்கு ஏது­வான யோச­னைகள் அடங்­கிய  விஞ்­ஞா­பனம் குறித்துத்  தமிழ்  மக்கள் கவனம் செலுத்­து­வார்கள். அத­னா­லேயே   பிர­தான வேட்­பா­ளர்கள் இந்த   தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான விடயம் குறித்து செலுத்­து­கின்ற அவ­தானம் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.

அதன்­படி தற்­போது  பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வெளி­வந்­துள்­ளன. இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­ன்  விஞ்­ஞா­ப­னங்­க­ளிலும்   தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும்  எவ்­வா­றான  கொள்­கைத்­திட்­டங்கள் உள்­ளன என்­பது தொடர்பில் மக்கள் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

கோத்­தாவின் விஞ்­ஞா­பனம்
ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின்  தேர்தல் விஞ்­ஞா­பனம்  கடந்த  25 ஆம் திகதி கொழும்பில் வெளியி­டப்­பட்­டது. அதில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களைப் பார்த்தால், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்று மிக முக்­கி­ய­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதா­வது, “சர்­வ­தேச சமூகம் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் அபி­லா­ஷை­க­ளுக்கு உட்­ப­டாத வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்புக் கொண்டு வரப்­படும். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­படும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை கலப்பு தேர்தல் முறை மாகா­ண­சபை முறை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப் ­ப­டுத்தல் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும்.

ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை, மத சுதந்­திரம், அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் பகு­தி­க­ளாக இருக்கும்.  ஜனா­தி­ப­தியின் தலை­மையில் சர்­வ­மத ஆலோ­சனை சபை உரு­வாக்­கப்­படும். மாவட்ட மற்றும் பிர­தேச மட்­டத்­திலும் சர்­வ­ம­தக்­கு­ழுக்கள் நிறு­வப்­படும்.

யுத்தம் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கு உட்­பட்டு சிறையில் வாடு­கின்ற ரா­ணுவ மற்றும் புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக முறை­யான புனர்­வாழ்வு முன்­னெ­டுக்­கப்­பட்டு சுதந்­திர மனி­தர்­க­ளாக சமூ­க­ம­யப்­ப­டுத்­த­ப­டு­வார்கள்.

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டில்  நீண்­ட­ கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைவர் விட­யத்­திலும் மூன்று மாத ­கா­லத்தில் வழக்கு தொட­ரப்­படும் அல்­லது விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள்.

காணிப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் நோக்கில் காணி பயன்­பாட்டுத் திட்டம் ஒன்று தேசிய மற்றும் மாகாண மட்­டத்தில் உரு­வாக்­கப்­படும் அதற்­காக தேசிய காணி ஆணைக்­குழு நிறு­வப்­படும்.

ஏப்ரல் 21 தாக்­குதல் தொடர்பில் பொறுபபு மீறி செயற்­பட்­ட­வர்கள் குறித்து விசா­ரிக்க முழு அதி­காரம் கொண்ட சுயா­தீன ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­படும்

பிராந்­திய பாது­காப்­புக்­காக இந்­தியா உள்­ளிட்ட சார்க் அமைப்பு, பீம் செக் அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற் ­ப­டுவோம்.

தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். வற் வரி­யா­னது குறைக்­கப்­படும்  ஆகிய விட­யங்கள் முக்­கி­ய­மா­க­வுள்­ளன.  அது மட்­டு­மன்றி  மேலும் கல்வி, சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து, இளைஞர், மகளிர், சிறுவர் விட­யங்கள், பொரு­ளா­தாரம், சுற்­று­லாத்­துறை,  வரிக்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக, கலா­சார அம்­சங்கள் குறித்து பல யோச­னை­களும் வாக்­கு­று­தி­களும்  ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின்  விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

பொது­வாக பல்­வேறு விட­யங்கள் குறித்து இந்த விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்­டுள்­ள­போ­திலும்  இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த விட­யங்கள்  தெளிவாக இல்லை என்ற விமர்­சனம்  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.  புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­படும் என்றும் அதில் ஒற்­றை­யாட்சி பேணப்­ப­டு­வ­துடன் பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பில் மாகாண சபை முறை, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை என்­பன   தொடர்பில்  ஆரா­யப்­படும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே  விஞ்­ஞா­ப­னத்தில் இந்த  விட­ய­தா­னத்­துக்குள்  தான்  நாம் தீர்வு குறித்த விட­யத்தை எதிர்­பார்க்க முடியும். ஆனால் அது தெளி­வாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் கடந்த வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.  அதில்  உள்ள முக்­கிய விட­யங்­களைப் பார்க்­கலாம்.

சஜித்தின் விஞ்­ஞா­பனம் 

தேசத்தை பாது­காக்­கவும் அதன் அடுத்த பய­ணத்தில் அதை வலு­வாக வைத்­தி­ருக்­கவும்   புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­படும். இது எமது கட்­ட­மைப்பில் ஜன­நா­ய­க­மாக்­கலை நிறைவு செய்யும். புதிய அர­சியல் அமைப்பு தேர்தல் முறைமை சீர்­தி­ருத் தம், தேர்தல் முறைமை மாற்றம் என்­ப­னவை குறித்து ஆராயும்  இந்த  அர­சியல் அமைப்பு அர­சாங்கம் எவ்­வாறு செயல்­ப­டு­கின்­றது என்­ப­தையும் சீர்­தி­ருத்தும். பிள­வு­ப­டாத மற்றும் பிரிக்க முடி­யாத இலங்­கைக்குள் அதி­க­பட்ச அதி­கார பகிர்வு அமுல்­ப­டுத்­தப்­படும். அதி­கா­ரப்­ப­கிர்வு அர்த்­த­முள்­ள­தா­கவும் வினைத்­திறன் உள்­ள­தா­கவும் மாறும். வீண­டிப்­புகள் குறைக்­கப்­படும்.

மத்­தியு மாகா­ணங்­களும்   தங்­க­ளது  திறன்கள் அடிப்­ப­டையில் அந்­தந்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்த முடியும் என்­பதை உறுதி செய்­வ­தற்­காக மாகா­ண ­ச­பைகள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட இரண்­டா­வது சபை- செனட் சபை ஒன்று உரு­வாக்­கப்­படும்.

தேவை­யான நிதியை திரட்­டவும், அவற்றில் பர­வ­லாக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­தவும் மாகா­ணங்­க­ளுக்கு தேவை­யான அதி­கா­ரங்கள் இருக்கும்.

மலை­யக மக்­க­ளுக்கு ஏழு பேர்ச் காணி­யுடன் வீட்­டுத்­திட்டம் நடை­   ­முறைப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் மலை­ய­கத்தின் பல்­க­லைக்­க­ழ­க­மாக ஹைலண்ட் பல்­க­லைக்­க­ழகம்  உரு­வாக்­கப்­படும்.

குற்­ற­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் விடு­விக்­கப்­ப­டுவர். காணாமல் போனோர் அலு­வ­லகம் ஊக்­கு­விக்­கப்­படும்.  பொது மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­படும் போன்ற பல்­வேறு விட­யங்கள்   சஜித் பிரே­ம­தா­சவின்  கொள்கை பிர­க­ட­னத்தில்  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் பெண்கள், சிறு­வர்கள்,  இளை­ஞர்­களுக்­கான திட்­டங்­களும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி,  சமூக மற்றும்  கலா­சார  அபி­வி­ருத்தி திட்­டங்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­த­வ­கையில் இரண்டு தரப்­பி­ன­ரதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் முக்­கிய பல விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.   புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச  பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் அதி­க­பட்ச அதி­காரப் பகிர்வை வழங்­கு­வ­தா­கவும் புதிய அர­சி­­யல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும்  உறு­தி­ய­ளித்­துள்ளார். அதே­போன்று  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி  வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ  புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும்  அதில் மாகாண சபை தேர்தல் முறை உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து  அதில்  ஆராய்­வ­தா­கவும்   குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வாறு இரு­வரும் தேசிய பிரச்­சி­னைகள் குறித்த தமது கொள்­கை­க­ளையும்  அணு­கு­மு­றை­க­ளையும் யோச­னை­க­ளையும் முன்­வைத்­துள்­ளனர். எனவே  தற்­போது பொது மக்கள் சிந்­தித்து  வாக்­க­ளிப்­பது  குறித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும்    இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட  இந்த நாட்டின்  தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­த­வேண்டும். யார்  ஜனா­தி­ப­தி ­யாக வந்­தாலும் இந்தப் பிரச்­சினை விட­யத்தில்  அலட்­சி­ய­மாக செயற்­பட முடி­யாது. தற்­போது  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்   சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பல சிறு­பான்மை கட்­சிகள் ஆத­ர­வ­ளிக்­கின்­றன.  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும்  ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ்,  தமிழ் முற்­போக்கு கூட்­டணி,  அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல­உ­று­மய உள்­ளிட்ட பிர­தான சிறிய கட்­சிகள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு  ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

அதே­போன்று தற்­போது  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும்  சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கி­றது. அத்­துடன் சுதந்­தி­ரக்­கட்­சியின் சந்­தி­ரிகா தரப்பும்   புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ருக்கு  ஆத­ரவு வழங்க முன்­வந்­தி­ருக்­கி­றது.  ஸ்ரீ­­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிரி­வி­னரும்  இவ்­வாறு சஜித்­துக்கு ஆத­ரவு வழங்க   முன்­வந்­துள்­ளனர்.

இதே­வேளை கோத்­த­பாய  ராஜ­ப­க்ஷ­வுக்கும் பல்­வேறு கட்­சிகள் ஆத­ரவு வழங்­கு­கின்­றன.  இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ்,   ஈ.பி.டி.பி.,  ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ்,  தேசிய காங்­கிரஸ்,     கருணா அம்மான், பிள்­ளையான் தரப்­புக்கள்,   லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி,   கம்­யூனிஸ்ட் கட்சி,   உள்­ளிட்ட பல்­வேறு கட்­சிகள்   ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

இவ்­வாறு பார்க்­கையில்,  இருதரப்­பி­னரும்   பல்­வேறு கட்­சி­க­ளு­டனும்  கூட்­டணி அமைத்­துக்­கொண்டு தேர்­தலை சந்­திக்­கின்­றனர்.  இந்தச் சூழலில் இந்த இரண்டு தரப்­பி­லுமே தமிழ்ப் பேசும்  மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு  மற்றும் ஏனைய அடிப்­படை பிரச்­சி­னைகள்   விரை­வாக   தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்ற விட­யங்­களை வலி­யு­றுத்­து­ப­வர்கள் இருக்­கின்­றனர்.  எனவே தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னையின் ஆழம், அதன் அவ­சியம்  அந்த பிரச்சி­னையின் தாற்­ப­ரியம் என்­ப­வற்றை இரண்டு பிர­தான  வேட்­பா­ளர்­களும்   புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­யமாகிறது.   தென்­னி­லங்­கையில் வாக்­குகள் கிடைக்­காமல் போய்­விடும் என்ற சந்­தே­கத்துக்குள் சிக்கி  தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னையை மூடி மறைத்­து­ விட முடி­யாது. இந்த மக்கள் நீண்­ட ­கா­ல­மாக  ஒரு அர­சியல் தீர்வைக் கோரி வரு­கின்­றனர்.    அதுவும் நியா­ய­மான முறையில் அந்தப் பிரச்­சினை தீர்த்­து­வைக்­கப்­ப­ட­வேண்டும்.

அதே­போன்று யுத்தம் கார­ண­மாக  ஏற்­பட்ட  பிரச்­சி­னைகள்  குறித்து   இது­வரை தீர்வு கிடைக்­காமல் இருக்­கி­றது.  யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்தும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்குத்

தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை.   இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சியல் கைதிகள் விவ­காரம், காணா­மற்­போனோர் பிரச்­சினை, காணி விடு­விப்பு, வடக்கு–கிழக்கு பொரு­ளா­தார அப­வி­ருத்தி, தொழில் வாய்ப்­புக்கள் உரு­வாக்கம், பொறுப்­புக்­கூறல், நெருக்­கடி, மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சினை, அபி­வி­ருத்தி விட­யங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள், தேசிய ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் உள்­ளிட்ட  பல்­வேறு பிரச்­சி­னைகள் இன்னும்  தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன.

எனவே  இந்த விட­யங்கள்  தொடர் பில்  இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கும்   பாரி­ய­ பொறுப்புக்கள் இருக்­கிறன.  மிக முக்கியமாகத்  தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் யாரும்   பொறுப்பின்றி  அல்லது  அலட்சியப்போக்கில் செயற்பட முடியாது.  ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்  மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை  ஒரு பொருட்டாக  மதிக்காமல் செயற்பட எந்த வேட்பாளரும் முயற்சிக்கக்கூடாது. இது தொடர்பில்  தெளிவான ஒரு பார்வை அவசியம்.

தற்போதைய நல்லாட்சியில் தீர்வுத்திட்டத்தையும் அடைய முடியவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் முழுமையாகத்  தீர்க்கவில்லை. இந்நிலையில்   மீண்டும் ஓர் ஆட்சிமலரவுள்ளது. 2020 ஆம் ஆண்டிலாவது   தமிழ்ப்பேசும் மக்களின் நீண்டகால  பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? மக்களின்  அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமா? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் அவசியம். தற்போது மக்க ளின் கைகளிலேயே  தீர்மானம் இருக்கின்றது. யார் ஜனாதிபதி என்பதனை  16 ஆம் திகதிக்கு பின்னர் தெரிந்துகொள்ளலாம். ஆனால் புதிய ஜனாதிபதிக்கு பல சவால்கள் உள்ளன.

குறிப்பாக  தமிழ்ப்பேசும் மக்களின்   அரசியல் தீர்வு பிரச்சினைக்கு  தீரவுகாண வேண்டிய முக்கிய தேவை உள்ளது. அது இலகுவான பயணமாக  அமையாது. நீண்ட கடின பாதையைக் கடந்தே  அதற்கு  சகலரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய   தீர்வைக்காண முடியும்.  அதே போன்று   யுத்தத்தினால்   தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை அவசியம்.  அவை  குறித்தும் புதிய ஜனாதிபதி  கவனம் செலுத்தவேண்டும். எனவே  புதிய  ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கும்  பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் விடயத்தில் பல சவால்கள் உள்ளன என்பதே யதார்த்தம்.

 ரொபட் அன்­டனி

Previous Post

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இஸ்லாமாபாத்தில் எதிர்க்கட்சிகளின் முற்றுகை போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.,

Next Post

சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In