அமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டியே அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தமது சுற்றுப்புறத்தை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.