முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆர்ட்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவை எச்சரிக்கிறது அமெரிக்கா

238

ஆர்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில், அமெரிக்கா, தனது குண்டுவீச்சு விமானங்களை, நோர்வேயில் நிறுத்த முடிவு செய்துள்ளது.

ஆர்டிக் சர்வதேச வான்பரப்பு மற்றும், வடமேற்கு கடற்பிரதேசங்களில், தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு, ரஷ்யாவின் ஆதிக்கப் போக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா கடும்போக்கிலான நடவடிக்கை மேற்கொண்டால், அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று புடினுக்கு  உணர்த்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சக்திவாய்ந்த போர் விமானங்களை நோர்வேக்கு அனுப்பவுள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் குண்டுவீசும் திறன் கொண்ட, பி-1 எனப் பெயரிட்ட, 4 போர் விமானங்களுடன், 200 அமெரிக்க இராணுவத்தினரும் நோர்வேயின் ஆர்லண்ட், விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *