தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச மருத்துவர்கள் அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளர் எண்ணிக்கையைச் சமாளிக்கக் கூடிய வகையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கு வசதியாக நியமிக்கப்பட்ட உணர்வழியியல் வல்லுநரை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்குமாறு கோரவுள்ளனர்.
நாளை காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை இந்த அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழைக் கிளையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.