மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக பலர் ஊடுருவுவதை தடுக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார். வெற்றி பெற்று தற்போது அமெரிக்க அதிபராகி உள்ள நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
அதற்கான தொகை மெக்சிகோவிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்க மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோ மறுத்து விட்டார்.
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி) செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அந்த தொகையை வழங்க மெக்சிகோ மறுத்த நிலையில் அதனிடம் இருந்தே வேறு விதமாக வசூலிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.