பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒருவர் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு கூட்டம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.9 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டது.