• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Friday, November 14, 2025
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

இலங்கையின் தென்பகுதியில் திடீரென ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்த்தில் 24 மணி நேரத்தினுள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

dineshpress by dineshpress
May 27, 2017
in இலங்கை, உலகம், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இலங்கையின் தென்பகுதியில் நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும், சுமார் 230 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொளுத்தி எடுத்த வெயிலின் பின்னர் இலங்கையின் தென்பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக காட்டாறாக வெள்ளம் எல்லா இடங்களிலும் பெருகி ஓடுவதுடன், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளதுடன், 110 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும், 53 ஆயிரம் பேர் வரையில் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இடர்முகாமைத்துவ மைய நிலையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கன மழையால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரித கதியில் மீட்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், முப்படையினர், காவல்த்துறையினர், அரச அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

மழை தொடர்வதனால் நீர்த் தேக்கங்கள் பலவற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், கிராமங்கள் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவதாகவும், ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துச் செல்வதனால், அவற்றின் அருகில் வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தென்பகுதி மாவட்டங்களான மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பகா மற்றும் கொழும்பில் நேற்றுமுன்நாள் இரவிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்வதனால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வரும் நிலையில், நிலமையைக் கட்டுப்படுத்த அவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

களு, களணி, ஜின், நில்வல ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், ஆறுகளின் நீர் மட்ட அதிகரிப்பு என்பனவற்றுக்கு மத்தியில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்த இயற்கைச் சீற்றத்தினால், நேற்றுக் காலையிலிருந்தே பல பிரதேசங்களில் சாவு ஓலம் கேட்கத் தொடங்கியதுடன், புதையுண்டவர்களைக் கூட மீட்க முடியாதளவிற்கு மழை தொடர்ந்து கொண்டிருந்தது.

இதேவேளை இராணுவத்தினர் 800 பேரும் வான் படையின் 7 உலங்கு வானூர்திகளும் உதவிப் பணிகளுக்காகக் களத்தில் இறக்கப்பட்டுள்ள போதிலும், விட்டுக் கொடுக்காது மழையும் தொடர்ந்து கொட்டித் தீர்ப்பதனால் மீட்பு மற்றும் உதவி வழங்கலில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.

சீறிப் பாய்ந்து செல்லும் வெள்ளம் மற்றும் ஆற்று நீரோட்டத்தின் காரணமாக பல முதன்மைச் சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல பிரதேசங்களுக்கான வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

லக்‌சபான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் மஸ்கெலிய கெனியோன் நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதனால், களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

கொழும்பில் களனி கங்கையை அண்மித்த கொலன்னாவை, சீதாவக, கடுவெல மற்றும் ஹோமாகம மற்றும் கம்பகா மாவட்டத்தின் களனி, வத்தளை மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 2,000 குடும்பங்கள் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மண்சரிவினால் களுத்துறை, காலி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்சரிவில் சிக்குண்டு – புதையுண்டு போனவர்களில் 91 பேர் வரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிற்ன நிலையில், இன்றைய நாள் சற்று மழை குறைந்தாலும், சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து மைத்திரி தப்புவதற்கு இடமளிக்கக்கூடாது என்று அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Posts

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !
உலகம்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

June 24, 2024
ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
உலகம்

ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

June 24, 2024
தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை
உலகம்

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
Next Post

பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆன்ரூ ஷியர்(Andrew Scheer) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In