• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Tuesday, April 21, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடரும் காட்டுத்தீ -37,000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

dineshpress by dineshpress
July 17, 2017
in கனடா, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக இதுவரை 37,000ற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போதும் 160க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ எரிந்துவரும் நிலையில், தொடர்ந்தும் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மாநில போக்கவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேகமான காற்றும் வரட்சியான காலநிலையும், காட்டுத்தீ பரவலை தீவிரமடைய செய்துள்ள நிலையில், தீப் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுத்தீயின் பரவலை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்களையும், அவர்களது பெறுமதியான சொத்துக்களையும் முடிந்தவரை பாதுகாப்பதில் அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் இதனையும் விடவும் மோசமான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை விடவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் நாடகளில் எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் மோசமான தீப்பரவல்கள் ஏற்படக்கூடும் எனவும், எனவே அனைவரும் எப்போதும் வெளியேறுவதற்கு தயாரான நிலையில் இருக்கவேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகள் என்று அனைத்து தரப்பினரும் இந்த நிலைமையினைச் சமாளிப்பதற்கு மிகுந்த பிராயத்தனத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 415 பேர் உட்பட, 2,895 தீயணைப்பு படையினர் ஈடுபட்டு்ளளனர் என்பதுடன், இதுவரை 1,361,737 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவு காட்டுத்தீக்கு இரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிவரும் நிலையில், அவர்களுக்கு தம்மாலான உதவிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெயரும் மக்கள் தஞ்சம் நாடும் இடங்களில் உள்ள மக்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், வேறு வழிவகைகள் மூலமும் தமது வீடுகளிலும், வளவுகளிலும் இடம்பெயரும் குடும்பங்கள் தங்குவதற்கான இடங்கள் உள்ளதான அறிவிப்புகளை பெருமளவில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தனி அறைகள், முழுமையான வீடுகள், வீட்டுக்கு வெளியே அமைத்துள்ள தற்காலிக குடில்கள் என்று பல்வேறு வழிகளிலும் மக்கள் தமது தரப்பு உதவிகளை வழங்க முன்வந்து, அதனை அறிவிப்பும் செய்து வருகின்றனர்.

தமது வீட்டில் மூன்று அறைகளுடன் கூடிய கீழ்த் தளம் தயாராக உள்ளது எனவும், தமது வீட்டு வளவில் கூடாரத்துடன் கூடிய தற்காலிக தங்குமிட வாகனம் தயாராக உள்ளது எனவும், தமது வளவில் இடம்பெயரும் மக்கள் தமது தங்குமிட வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் உள்ளது எனவும் பல்வேறு மக்களும் தமது அறிவிப்புகளை இவ்வாறு வெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல இடம்பெயரும் மக்கள் தமது செல்லப்பிராணிகள், மற்றும் குதிரை, ஆடு, மாடு, கோழி போன்றவற்றை தமது இடங்களில் விட்டுப் பராமரித்துக் கொள்ளலாம் எனவும் பல்வேறு மக்கள் அறிவிப்பு வெளியிட்டு்ளளனர்.

இடம்பெயரும் மக்களில் சிறப்புத் தேவைக்கு உட்பட்ட மக்கள், நோயாளர்கள் என்று பலரும் காணப்படும் நிலையில், வழக்கமனா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சிரமங்களை எதி்ர்நோக்கக்கூடிய அவர்களுக்கு, இவ்வாறான மக்களின் உதவிகள் மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous Post

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் பெருவெள்ளம் – 18 பேர் பலி

Next Post

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

Related Posts

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
கனடா

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

June 24, 2024
கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம்
கனடா

கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம்

June 24, 2024
கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
கனடா

கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
Next Post

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In