• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Saturday, April 18, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் டெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம்

dineshpress by dineshpress
August 13, 2017
in இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அமைச்சு பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைமைத்துவ குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் சனிக்கிழமை கூடிய அந்தக் கட்சியின் தலைமைத்துவ குழு ஐந்து மணித்தியாலங்கள் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டெனிஸ்வரனின் இராஜிநாமா விடயம் முக்கியமாக ஆராயப்பட்டதாக அந்தக் சட்சியின் செயலாளர் சிறிகாந்தா கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசகையில் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சில வாரங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வடமாகாண சபையில் உள்ள ஆறு உறுப்பினர்களிலே அமைச்சர் டெனிஸ்வரன் கையெழுத்திட்டிருந்தார். அவருடைய அந்த நடவடிக்கை எங்களுடைய கட்சியினுடைய அனுமதி இல்லாமலும் கட்சித் தலைமையினுடைய ஆலோசனையைப் பெறாமலும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருந்த காரணத்தினாலே நாங்கள் அவரிடமிருந்து இது தொடர்பிலே விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம்.
கட்சியினுடைய அனுமதியில்லாமல் வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலே கையெழுத்திட்ட காரணத்துக்காக அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதற்கு காரணம் ஏதாவது இருந்தால் அதனை கடிதம் கிடைத்து இரண்டு வாரங்களுக்குள்ளே எழுத்து மூலமாக எங்களுக்கு சமர்ப்பிக்குமாறு கட்சியின் சார்பில் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தும் அமைச்சர் டெனிஸ்வரனிடமிருந்து எழுத்து மூலமான விளக்கம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்க வில்லை. இருந்தாலும் இன்றைய தலைமைக்குழு கூட்டத்திலே அவர் சமூகமளித்து, தன்னுடைய நடவடிக்கை தொடர்பிலே விளக்கமளித்திருக்கின்றார். நாங்களும் அவரிடம் சில விடயங்கள் தொடர்பிலே கேள்விகளை எழுப்பி தெளிவுபடுத்தல்களைப் பெற்றிருக்கிறோம்.
இந்த நிலையிலே நாங்கள் எற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுடனும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோடும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட சந்திப்பின் போது எட்டப்பட்ட முடிவின் பிரகாரம் வடமாகாண அமைச்சரவையை முதலமைச்சர் மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனிஸ்வரன் வகித்து வருகின்ற அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்யும்படி நாங்கள் கேட்டிருக்கிறோம்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்கிற அந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு புறம்பாக இந்த வேண்டுகோள் அவருக்கு இன்றைய தினம் விடுக்கப்பட்டிருக்கின்றது.
அதைப் பரிசீலிப்பதாகவும் அதன் முடிவை நாளைய தினம் அறிவிப்பதாக அவர் எங்களுக்குத் தெரிவித்திருக்கி ன்றார்.
அவருடைய முடிவைப் பொறுத்துத்தான் ஒழுங்கு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதா என்பதுபற்றி நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
இப்போது விவகாரம் முற்று முழுக்க டெனிஸ்வரனிடம் விடப்பட்டிருக்கின்றது. கட்சியினுடைய வேண்டுகோளை மதித்து, அவர் ஏற்கனவே எமது கட்சியும் கூட்டமைப்பினுடைய ஏனைய மூன்று கட்சிகளும் முதலமைச்சரோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற உடன்பாட்டிற்கு ஏதுவாக தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்வார் என்றும் அதனூடாக வடமாகாண அமைச்சரவையை மீள் அமைப்பதற்கான சந்தர்ப்பம் முதலமைச்சருக்குக் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா.
அமைச்சர் டெனிஸ்வரன் இராஜிநாமா செய்வதனால் ஏற்படுகின்ற வெற்றிடத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினராகிய விந்தன் கனகரட்னமே நியமிக்கப்படுவார் என்பதையும் தலைமைக்குழு தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் டெனிஸ்வரனுடைய விவகாரத்திற்கு அடுத்ததாக அரசாங்கம் கொண்டு வரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயம் என்பன குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இருபதாவது திருத்தமும் அரசியல் தீர்வு விவகாரமும்
அரசியலமைப்புக்குக் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற 20 ஆவது திருத்தம் தொடர்பிலே விவாதித்து கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கு ஏதுவாக கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை உடனடியாக விரைந்து கூட்ட வேண்டும் என நாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பது என தீர்மானித்திருக்கின்றோம்.
குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு எழுத்து மூலமான இந்த வேண்டுகோள் அடுத்து வரும் இரண்டொரு தினங்களிலே அனுப்பி வைக்கப்படும்.
மேலும் அரசியலமைப்பு தொடர்பான விவகாரங்கள் சம்பந்தமாகவும் எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், அதேநேரத்தில் இரண்டு பிரதான சிங்கள பிரதான கட்சிகளும் கூட்டாக அரசை அமைத்து அந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கி;ன்ற இன்றைய அரசியல் சூழ்நிலை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கிடைத்திருக்கின்ற ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த அரசியல் தீர்வ முயற்சிகளைத் தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளi எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம்.
இதுதொடர்பாக எற்கனவே ஒரு சந்திப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களோடும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் நடத்தப்பட்டிருக்கின்றது.
இருந்தாலும்கூட நாங்கள் முழுமையான பிரதிதித்துவத்தைக் கொண்ட ஒரு குழு தமிழரசுக்ட்சியின் சார்பிலும் எங்களுடைய கட்சியின் சார்பில் இன்னுமொரு குழுவுமாக இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை முன்னெடுப்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு முயற்சிகளைப் பொருத்தமட்டிலே காத்திரமான சில முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை முன் நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அதனைத்தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் ஊடாக ஒடடுமொத்தமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டிலே ஒன்றாக இந்த அரசியல் தீர்வு விடயத்திலே குரல் எழுப்பக் கூடிய சூழல் உருவாகும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

Previous Post

ஜெனிவா தீர்மான அமுலாக்கம் குறித்து 36 ஆவது கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பத் தயாராகும் அமைப்புகள்!

Next Post

பொதுமக்கள் மீதான தாக்குதல் –அமெரிக்கா மறுப்பு

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

பொதுமக்கள் மீதான தாக்குதல் –அமெரிக்கா மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In