சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரின் போது சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டமை, உணவு மறுக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகளால், கிளர்ச்சியாளர்கள் குடியிருப்பு வாசிகளுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் டமாஸ்கஸ் அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளில் பாகுபாடின்றி தொடர்ந்து குண்டு வீசியது போர் குற்றமாகும் என்றும் கிளர்ச்சியாளர்கள் குழு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.