பாதுகாப்புச் செலவீனங்களை இரட்டிப்பாக்கம் திட்டங்கள் எவையும் தம்மிடம் இல்லை என்று பிரதம்ர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
லட்வியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரூடோ, அந்த நாட்டுக்கான பயணத்தின் முடிவில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
லட்வியாவில் நேட்டோ கூட்டமைப்பின் நடவடிக்கையின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு்ளள கனேடிய படைகள் 2023ஆம் ஆண்டு வரையிலும் அங்கு இருப்பார்கள் எனவும், அங்குள்ள கனேடிய படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கனடாவின் பாதுகாப்புச் செலவீனத்தினை இரண்டு மடங்காக அதிகரிக்கும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நேடடோ அமைப்புக்கான நிதி பங்களிப்பினை கனடா அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலேயே, பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனைத் தெரிவித்துளளமை குறிப்பிடத்தக்கது.
நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் அனைத்தும், தமது ஒட்டுமொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் இருந்து இரண்டு சதவீதத்தினை பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்க வேண்டும் என்று நேட்டோ அமைப்பு கூறி வருகிறது.
எனினும் கனடா தனது மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் இருந்த 1.23 சதவீதத்தினை மட்டுமே பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்கி வருவதாகவும் தெரிவித்துள்ள நேட்டோ அமைப்பு, அதனை அதிகரிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்புக்களின் மாநாடு ஒன்று நாளை பிரசெல்சில் தொடங்கவுள்ள நிலையில், தமது பாதுகாப்பு செலவீனத்தினை இரட்டிப்பாக்கும் திட்டங்கள் எவையும் இல்லை என்று கனேடிய பிரதமர் அறிவித்துள்ளமை, பல்வேறு மட்டங்களிலும் அவதானிப்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.