முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணதண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கே மிகவும் பொருத்தமானவர் என்று இலங்கையின் பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்.
பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனாதிபதி கதிரையில் அமரவேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஸ அடம்பிடித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையில் சனாதிபதியை தெரிவு செய்வது மகிந்த ராஜபக்ஸ அல்ல என்றும் நாட்டு மக்களே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தாமரை மொட்டு கட்சிக்குள் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், சனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதே அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்றும் கூறியு்ள்ள அவர், எது எப்படியோ ராஜபக்ஸர்களில் ஒருவரைத்தான் சனாதிபதி வேட்பாளராக பெயரிடப்போவதாகவும் கூறியுள்ளார்.
சனாதிபதி கதிரைக்கு ஆசைப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு பதவிக்கே மிகவும் பொருத்தமானவர் என்றும், போகம்பர சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கு அவர் விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கையின் பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த மேலும் தெரிவித்துள்ளார்.