ரொரன்ரோ டவுன்ரவுன் மத்திய பகுதியில் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
King street மற்றும் Church street பகுதியில், இன்று அதிகாலை 3.20 அளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தாக்கப்பட்டதாகவும், பலத்தகாயங்களுக்கு உள்ளான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த இருவருமே உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படடதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவிலலை என்பதுடன், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.