பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆழ்ந்த சிந்தனை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக பிரித்தானியா சென்றுள்ள நிலையில், அங்கு இலண்டன் நகரில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் விவகாரத்தை கையாள்வது என்பது மிகக் கடினமானது என்றும், பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க அதிகாரம் எந்த ஒரு அமைப்பிடமும் இல்லை எனவும் அவர் விபரித்து்ளளார்.
அத்துடன் டோக்லாமில் சீனா அத்துமீறி நுழைந்ததை, பிரதமர் நரேந்திர மோடி தனி சம்பவமாக பார்க்கிறார் என்றும், ஆனால் இது பல்வேறு நிகழ்வுகளில் ஒரு அங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் பல அத்துமீறல்களின் தொடர்ச்சியாக பிரதமர் மோடி ஆழ்ந்து கவனித்து வந்து இருந்தால் அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்காமல் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். உண்மையை சொல்வதானால், டோக்லாமில், சீனர்கள் இன்றும் உள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் என்றும் கூறியுள்ள ராகுல் காந்தி, அவருக்கு இப்போது இருக்கும் வேலை விசா வழங்குவது மட்டும்தான் என்வும் விமர்சித்துள்ளார்.
எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுதல் காந்தி இந்த இல்ணடன் பயணத்தின் முன்னர் யேர்மன் நாட்டிற்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு உரையாற்றிய போதும், பாரதிய ஜனதாக கட்சியையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த இரண்டு அமைப்புக்களும் தேசத்தை பிளவுபடுத்துவதாகவும், மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புகிறன எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.