இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் நடைபெற்ற மிக பெரியதொரு பேரணியில் இந்த செயற்பாட்டளர்கள் தலித்துகளை தூண்டிவிட்டதால் நடைபெற்ற வன்முறையால் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.