ஈராக் நாட்டின் வடக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் வடக்கில் உள்ள சாப், காரா மற்றும் ஹக்குர்க் ஆகிய இடங்களின் வான் பகுதிகளில் துருக்கி விமானப்படை இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக அந்த நாட்டு இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளதுடன், பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.
அவர்கள் இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்ற நிலையில், இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.