எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை பிற்பகல் 5 மணிக்கு அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கவே, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு இலங்கை அதிபர் அழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.