சீனாவின் ஹ_வாவே செல்லிடப்பேசிகளை கனடாவின் 5ஜீ வலையமைப்பிலிருந்து தடை செய்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்று கனடாவிற்கான சீனத் தூதுவர் டுர ளூயலந எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹ_வாவே நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டால் இரு தரப்பு உறவுகளில் நிலவி வரும் விரிசல் நிலைமை மேலும் மேலும் உக்கிரமடையும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
5ஜீ வலையமைப்புக்களினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து கனடா தற்போது ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இதுவரையில் ஹ_வாவே நிறுவனத்தின் செல்லிடப்பேசிகளை தடை செய்வதாக கனடா நேரடியாக அறிவிக்கவில்லை, சில மேற்குலக நாடுகள் ஏற்கனவே இத்தடை குறித்து அறிவித்துள்ளன.
கனேடிய அரசாங்கம்ம் பொறுப்புடன் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறினால் பாதக விளைவுகளை உருவாக்கும் எனவும் தூதுவர் டுர ளூயலந தெரிவித்துள்ளார்.