அமெரிக்காவில் நிலவும் கடுங்குளிருடனான வானிலை காரணமாக மேற்கு மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், அலபாமா மற்றும் மிஸிசிப்பி ஆகிய மாநிலங்களிலேயே இவ்வாறு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
துருவ சுழல் என கூறப்படும் வரலாறு காணாத கடுங்குளிரை எதிர்கொண்டுள்ளமை காரணமாக, அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்கியுள்ளன.
ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடுங்குளிருடனான வானிலையால் சிக்காகோ ஆறு, பனிக்கட்டியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடுங்குளிரால், அமெரிக்காவில் சுமார் 2500 விமானங்களின் போக்குவரத்துக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.