வேல்முருகன், தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பிரதான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பு வெளியான பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் முழுமையான நிலைப்பாட்டினைத் தெரிவிப்போம் என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக பணத்திற்காக வாக்களிப்பதற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழர் நலன் சார்;ந்த தமது கோரிக்கைகளை அரசியல் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கின்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கும் தயாராகவுள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.





