இம்ரான்கான் பதவியிலிருந்து இன்னும் 2 நாட்களில் விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர். பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் தலைமையிலான ஆட்சியில் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுள்ளதாகவும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றாலும் மக்கள் துயரத்தில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு நாடாளுமன்ற தேர்தலில் மோசடியில் ஈடுபட்டு இம்ரான்கானின் கட்சி ஆட்சியை பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மதத் தலைவர் ஜாமியர் உலேமா இ இஸ்லாம் பஸ்ல் இயக்கத் தலைவர் மவுலானா பஸ்லூர் ரஹ்மான் முன்வைத்துள்ளார்.





