சீனாவில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,592 ஆக இன்று (திங்கள்கிழமை) உயா்ந்து உள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 77,150க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.
தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 161 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்து உள்ளது.
இத்தாலியிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது வரை 152 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானிலும் கொவைட்-19 பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 28 நாடுகளில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500க்கும் அதிகமாக அதிகரித்து காணப்படுகிறது.