அமெரிக்க வரலாற்றிலேயே 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்தான் பாதுகாப்பற்ற முறையில் நடந்ததாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் டிரம்பை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட கீச்சகப் பதிவு ஒன்றில் “நமது 2020 ஜனாதிபதி தேர்தல் மோசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் இதுவாகும்” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில் அவர் “தேர்தலில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளன. இது அனைவருக்கும் தெரியும். ஒபாமாவை விட ஜோ பைடன் கருப்பின சமூகத்திடம் இருந்து அதிக வாக்குகளைப் பெறவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயமாக 8 கோடி வாக்குகளை அவர் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.