மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, குசலா சரோஜினி வீரவத்தன தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்றை நாம் ஸ்தாபித் துள்ளோம் என அவர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஐவர் அடங்கிய குழு குறித்த சம்பவம் தொடர்பாகத் தீவிரமாக ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் முழுமையான அறிக்கையை வழங்கவுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவமானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதோடு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடை கிறோம் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை நிதியமைச்சர் நியமித்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவிலிருந்து பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண விலகியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து தன்னை நீக்கிவிட்டு வேறொரு நபரை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் காவல்துறை ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றுவதால், ஊடக சந்திப்புகளில் கலந்துகொண்டு வருவதாகவும் இவ்வாறான விசாரணைக்குழுவில் இணைந்து செயற்படுவது கடினம் எனவும் அமைச்சரிடம் அவர் கோரியுள்ளார்.