தான் பதவியேற்று முதல் 100 நாட்களும் முககவசங்களை அணிந்து கொள்ளுமாறு அமெரிக்க மக்களிடம் கேட்கப் போவதாக, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடென் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாட்டு மக்களிடம் தாம் இந்த வேண்டுகோளை விடுக்கப் போவதாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அமெரிக்கரும் முககவசம் அணிந்தால், கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள பைடென், எல்லா அமெரிக்க அரசாங்க கட்டடங்களிலும், முக கவசங்களை அணியுமாறு கட்டளையிடப் போவதாகவும், தெரிவித்துள்ளார்.