ஒன்ராரியோவில் நாளொன்றில் ஆயிரத்து 925 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு 26மரணங்கள் சம்பவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 872பேர் பாதிக்கப்பட்டதோடு, 112பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நான்கு இலட்சத்து 23ஆயிரத்து 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12ஆயிரத்து 777பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 71ஆயிரத்து 542பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 530பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.