கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆரம்ப நிலையில் அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் அர்த்தமுள்ள தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) தெரிவித்துள்ளார்
கொரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ள அமெரிக்க நிறுவனமான பைசர் தனது பல மில்லியன் கணக்கான உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு உரிய ஒப்பந்தக்கடமைகளை நிறைவேற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
ஆனால் இந்த உற்பத்திகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் செயற்பாட்டில் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் இருப்பதாக தகவல்கள் உள்ளன.
குறிப்பாக, தடுப்பு மருந்து ஏற்பட்ட வானூர்திகள், கப்பல்களை கட்டப்படுத்தும் பணிகளில் அவர் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் உள்ளன.
இருப்பினும் அந் நிறுவனம் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.