இந்தோ- பசிபிக் நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம், அமெரிக்காவும், ஏனைய நாடுகளும், சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஈடுபடுத்த முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (sergey lavrov), அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரே மாதிரியான உலக ஒழுங்கை நிலைநாட்ட மேற்கு நாடுகள் முயற்சி செய்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தற்போது மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான, ஆக்ரோசமான மற்றும் மோசமான கொள்கைகளின் ஒரு பொருளாக இருக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.